161. முன்றேர்க் குரவை
வென்றேந்திய விறற்படையோன்
முன்றேர்க்க ணணங்காடின்று.

(இ - ள்.) வென்றெடுத்த வெற்றியான் மிக்க ஆயுதத்தையுடையான் தேரின்முன் பேயாடியது எ-று.

(வ - று.)
உலவா வளஞ்செய்தா னூழிவாழ் கென்று
புலவாய புன்றலைப்பே யாடும்-கலவா
அரசதிர நூறி யடுகளம் வேட்டான்
முரசதிர வென்றதேர் முன்.

(இ - ள்.) கெடாத நன்மையினைச் செய்தவன் நெடுங்காலம் வாழ்வானாகவெனச் சொல்லிப் புலால்நாறும் வாயினையும் புற்கென்ற தலையினையுமுடைய பேய் கூத்தாடும்;பொருந்தாத மன்னர் நடுங்கவெட்டிக்கள வேள்வி வேட்டான் முரசுமுழங்க வென்ற தேரின்முன்பு எ-று.

முன் பேயாடும்.

(7)