162. பின்றோர்க் குரவை
பொய்கழலான் றேரின்பின்
மொய்வளை விறலியர் வயவரொடின்று

(இ - ள்.) இட்ட வீரக்கழலினையுடையான் தேரின்பின் செறிந்த தொடியினையுடைய பாணிச்சியர் வீரரோடு கூத்தாடியது எ-று.

(வ - று.)
12வஞ்சமில் கோலானை வாழ்த்தி வயவரும்
அஞ்சொல் விறலியரு மாடுபவே-3வெஞ்சமரில்
குன்றேர் மழகளிறுங் கூந்தற் பிடியும்போற்
பின்றேர்க் குரவை பிணைந்து.

(இ - ள்.) பொய்யாத செங்கோலினையுடைய அரசனைத் துதித்து வெற்றியினையுடைய வீரரும் அழகிய மொழியினையுடைய பாணிச்சியரும் கூத்தாடா நின்றார் வெவ்விய பூசலிடத்து;மலையையொக்கும் இளைய யானையினையும் கூந்தற்பிடியினையும் ஒப்பத் தேரின்பின் கைகோத்தாடும் கோப்பைக்கொண்டு எ-று.

தும்பையின் முன்றேர்க்குரவை பின்றேர்க்குரவை 4போர்க்குச் செல்லும் தேரின்மேல்;இவை வென்றுநின்ற தேரின்மேல்.

(8)

1. தொல். புறத். சூ. 17, இளம். மேற். (பி-ம்.)
2. வஞ்சமிலாக்
3. வெஞ்சமத்து
4. பொரச்செல்லும்