167. அறிவன் வாகை
புகழ்நுவல முக்காலமும்
நிகழ்பறிபவ னியல்புரைத்தன்று.

(இ - ள்.) தன் கீர்த்தியைச் சொல்ல மூன்றுகால நிகழ்ச்சியையும் அறியுமவன் தன்மையைச் சொல்லியது எ-று.

(வ - று.)
1இம்மூ வுலகி னிருள்கடியு மாய்கதிர்போல்
அம்மூன்று முற்ற வறிதலாற்-றம்மின்
உறழா மயங்கி யுறழினு மென்றும்
2பிறழா பெரியோர்வாய்ச் சொல்.

(இ - ள்.) நாகலோகம் பூலோகம் சுவர்க்கலோகமென்னும் மூன்று லோகத்திலுமுள்ள அந்தகாரத்தைப்போக்கும் அழகிய ஆதித்தனையொப்ப இறப்பு நிகழ்பு எதிர்வெனும் மூன்று காலத்தையும் முடிய அறிதலால் தம்மில் தாம் மாறுபடாதன மாறுபட்டுப் 3பால்புளித்துப் பகலிருண்டு மாறுபடினும் எக்காலத்தினுந் தப்பா,சான்றோர் மெய்ம்மொழி எ-று.

4ஒருபாற் கிளவி எனைப்பாற் கண்ணும் வரும் ஆதலால்,அறிபவன் என்றார்.

(13)

1. பெருங். 4.5:122-4.
2. நற்.289:2-3; பதிற்.63:6-7.
3. புறநா.2:17-8.
4. தொல்.பொருளியல்,சூ.28.