தாபத முனிவர் தவத்தொடு முயங்கி ஓவுத லறியா வொழுக்குரைத் தன்று. (இ - ள்.) தபோதனவேடத்தர் புண்ணியத்தோடு தழுவி ஒழிதலுணராத நடையைச் சொல்லியது எ-று. (வ - று.) 1நீர்பலகான் மூழ்கி நிலத்தசைஇத் 2தோலுடீஇச் சோர்சடை தாழச் சுடரோம்பி-ஊரடையார் கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல் வானகத் துய்க்கும் வழி. (இ - ள்.) நீரிலே 3பலகால்முழுகி வெறுநிலத்துச்சாய்ந்து மான்றோலைப் புடைவையாகவுடுத்து நெகிழ்ந்தசடைவீழத் தீயைப்பரிகரித்துப் பதியிடத்து அணையாராய்க் காட்டிலுள்ள சாகமூலபலங்களைக் கைப்பற்றித் தெய்வத்தினையும் விருந்தினையும் போற்றுமது,சுவர்க்கத்துத் தம்மைச் செலுத்தும் நெறி எ-று. (14)
1. தொல்.புறத்.சூ.16,இளம்.மேற்.குறள்.26,பரிமேல்.வி. 2. தோலுடையாச் 3. பலகாலும் |