172. பார்ப்பன முல்லை
கான்மலியு நறுந்தெரியற் கழல்வேந்த ரிகலவிக்கும்
1நான்மறையோ னலம்பெருகு நடுவுநிலை யுரைத்தன்று.

(இ - ள்.) செவ்விமிக்க நறுநாற்றஞ் செறிந்த மாலையினையுடைய வீரக்கழலாற் பொலிந்த மன்னர் மாறுபாட்டைக்கெடுக்கும் நான்கு வேதத்தினையுடையோன் நன்மைமிக்க செப்பமுறைமையைச் சொல்லியது எ-று.

(வ - று.)
ஒல்லெனீர் ஞாலத் துணர்வோ விழுமிதே
நல்லிசை முச்செந்தீ நான்மறையோன் - 2செல்லலும்
வென்றன்றி மீளா விறல்வேந்தர் வெம்பகை
என்றன்றி மீண்ட திலர் .

(இ - ள்.) அநுகரண ஓசையையுடைய கடல்சூழ்ந்த வையகத்து அறிவு சாலச் சீரிதாகவிருந்தது; அழகிய புகழினையும் மூன்று செந்தீயினையும் நான்கு வேதத்தினையுமுடையோன் சந்துவேண்டிச் சென்றானாகப் பகைமேல் எடுத்துச் சென்றால் வென்றல்லது மீளாத வெற்றி மன்னர் வெய்யமுரணென்றல்லது பொருந்தி மீண்டதிலர் எ-று.

(18)

1. புநநா. 305 : 2 .
2. செல்லவும்