173. அவைய முல்லை
நவைநீங்க நடுவுகூறும்
அவைமாந்த ரியல்புரைத்தன்று.

(இ - ள்.) குற்றம் கெட நடுவுசொல்லும் அவைக்களத்துச் சான்றோர் தன்மையைச் சொல்லியது எ-று.

(வ - று.)
1தொடைவிடை யூழாத் தொடைவிடை துன்னித்
தொடைவிடை யூழிவை தோலாத் - தொடைவேட்
டழிபட 2லாற்ற லறிமுறையேன் 3றெட்டின்
வழிபடர்தல் வல்ல தவை .

(இ - ள்.) 4அனுயோகமும் உத்தரமும் முறைமையாக 5அனுயோகத்தையும் உத்தரத்தையும் புத்திபண்ணித் தொடையும் விடையும் முறைமையும் என்றிவை தப்பாத சயபத்திரத்தைவிரும்பித் தோல்வியும்வெற்றியும் நெறியாலே நிச்சயிக்கும் முறைமையை மேற்கொண்டு எட்டின் நெறியே செல்லல்வல்லது அவைக்களம் எ-று.

எட்டாவன; "குடிப்பிறப்புக் கல்வி குணம் வாய்மை தூய்மை, நடுச்சொல்லு நல்லணி யாக்கம் - கெடுக்கும், அழுக்கா றவாவின்மை யவ்வி ரண்டோ டெட்டும் , இழுக்கா வவையின்க ணெட்டு " என்பதனான்றிக.

(19)

1. குறள். 118, பரிமேல். வி.
2. லாற்றா
3. பு-வெ. 178 : 4 தொல். புறத். சூ. 21; மதுரைக். 161-3, உரை மேற்.
4. அபியோக
5. செல்லவும்