அடல்வே லாடவர்க் கன்றியு மவ்வில் மடவரன் மகளிர்க்கு மறமிகுத் தன்று. (இ - ள்.) கொல்லும் வேலினையுடைய வீரர்க்கல்லது அந்த மறக்குடியில் மடப்பத்தினையுடைய அரிவைமார்க்கும் சினத்தைச் சிறப்பித்தது எ-று. (வ - று.) வந்த படைநோனாள் வாயின் முலைபறித்து வெந்திற லெஃக2மிறைக்கொளீஇ - முந்தை முதல்வர்கற் றான்காட்டி 3மூதின் மடவாள் புதல்வனைச் செல்கென்றாள் போர்க்கு . (இ - ள்.) தங்கள்மேல் எடுத்துவந்த சேனையைப் பொறாளாய்ப் பிள்ளை வாயின் முலையை வாங்கி வெவ்விய வெற்றியினையுடைய வேலை முன்பு பகைவரைக் குத்திவளைந்த வளைவுதவிர்த்து முன்பு தன்வழியினுள்ளோர் நடுகல்லைத் தான் அவனுக்குக்காட்டிப் பழையமறக்குடியிற் பேதையானவள் பூசலுக்குப் போவாயாகவென்று சொன்னாள் எ-று. இறைக்கொளீஇ - கையிலே கொடுத்தென்றுமாம். (21)
1. தொல். புறத். சூ. 4, இளம். வி. 2. புறநா. 284 : 6-7, அடிக். 3. புறநா. 19 : 15; 279 :2. |