185. சால்பு முல்லை
வான்றோயு மலையன்ன
சான்றோர்தஞ் சால்புரைத்தன்று.

(இ - ள்.) ஆகாசத்தைக் கிட்டும் வரையையொத்த சான்றாளர் தம்முடைய அமைதியைச் சொல்லியது எ-று.

(வ - று.)
உறையார் விசும்பி னுவாமதி போல
1நிறையா நிலவுத லன்றிக் - குறையாத
வங்கம்போழ் முந்நீர் வளம்பெறினும் வேறாமோ
சங்கம்போல் 2வான்மையார் சால்பு .

(இ - ள்.) மழைநிறைந்த ஆகாயத்திடத்து 3உவாநாள் மதியை யொப்ப நிறைந்து மன்னுதலல்லது குறையாத மரக்கலம் பிளக்கும் கடலிடத்துப் பலபொருளினையும் பெறினும் வேறுபடுமோ , சங்கம்போலத் தூய்மையையுடையாரமைதி! எ-று.

(31)

1. மதுரைக். 202-4; புறநா. 182. (பி.ம்.)
2. வாய்மையார்
3. உவாநாளைமதியை