வையகத்து விழைவறுத்து மெய்யாய பொருணயந்தன்று. (இ - ள்.) பூமியிடத்துப் பற்றாய விருப்பத்தினை ஒழித்து மெய்ம்மையான பொருளை விரும்பியது எ-று. (வ - று.) ஆமினி மூப்பு மகன்ற திளமையும் 1தாமினி நோயுந் தலைவரும் - யாமினி மெய்யைந்து மீதூர வைகாது மேல்வந்த ஐயைந்து மாய்வ தறிவு . (இ - ள்.) இனி மூப்பும் ஆம்; கழிந்தது இளமையும்; நோய்தாமும் இனிமேல் வரும்; யாம் இப்போது சரீரத்திற் பஞ்சேந்திரியங்கள் அடரத்தங்காது தலைவந்த பஞ்சவிருத்தியைத் தெரியுமது நல்லறிவு எ-று. ஐயைந்தாவன : மெய்ம்முதலான ஞானேந்திரியங்கள் ஐந்தும் , பூமி முதலான மகாபூதங்கள் ஐந்தும் , சுவைமுதலான தன்மாத்திரைகள் ஐந்தும் , வாக்குமுதலான கன்மேந்திரியங்கள் ஐந்தும் , மனமுதலான அந்தக்கரணம் நான்கும் சீவனுமாகிய ஐந்தும். (33)
1. சீவக. 247, ந. மேற். |