1ஒலிகடல் வையகத்து நலிவுகண்டு நயப்பவிந்தன்று. (இ - ள்.) முழங்கும் கடலுலகத்துத் துயரத்தைப் பார்த்துப் பற்றை ஒழிந்தது எ-று. (வ - று.) கயக்கிய நோயவாய்க் கையிகந்து நம்மை இயக்கிய யாக்கை யிறாமுன்-மயக்கிய பட்படா வைகும் பயன்ஞால நீள்வலை உட்படாம் போத லுறும். (இ - ள்.) கலக்கிய நோவுகளையுடையவாய்க் கைகடந்து நம்மை நடத்திய சரீரம் ஒடிவதற்கு முன்னே மருளப் பண்ணின குணம் அடுத்துத் தங்கும் பயத்தையுடைய உலகமாகிய நீண்ட கண்ணியுள்ளே அகப்படாமாகி நன்னெறிக்கட் சேர்தல் உறுதியுடைத்து. பண்பு: பட்பென விகாரமாயிற்று. (34)
1. மாறன். ப. 42, மேற். |