இன்னோ ரின்னவை கொடுத்தார் நீயும் அன்னோர் போல வமையெமக் கீகென என்னோரு மறிய வெடுத்துரைத் தன்று. (இ - ள்.) இத்தன்மையோர் இத்தன்மை வழங்கினார், நீயும் அத்தன்மையோர்போல் அப்படியான பொருள்களை எமக்குத் தருவாயாகவென்று சொல்லி எத்தன்மையோரும் உணர உயர்த்துச் சொல்லியது எ-று. (வ - று.) 1முல்லைக்குத் தேரு மயிலுக்குப் போர்வையும் எல்லைநீர் ஞாலத் திசைவிளங்கத் - தொல்லை இரவாம லீந்த 2விறைவர்போ னீயும் கரவாம லீகை கடன். (இ - ள்.) முல்லைக்குப் பொற்றேரும் மயிலுக்கு மணிப்படாமும் எல்லை கடலாகவுடைய வையகத்துக் கீர்த்திவிளங்க முற்காலத்து வேண்டாமே கொடுத்த உபகாரிகளை யொப்ப நீயும் ஒளியாது வழங்கல் கடன் எ-று. (6)
1. பழ. 361. 2. இறைவர் : பாரி, பேகனென்பார்; சிறுபாண். 84-91; புறநா. 200, 201, 141, 145. |