195. இதுவுமது
மயலுறு சீர்த்தி மான்றேர் மன்னவன்
இயல்பே மொழியினு மத்துறை யாகும்.

(இ - ள்.) மயக்கமற்ற மிக்க புகழினையும் குதிரையாற் பூடடப் பட்ட தேரினையுமுடைய அரசன் தன்மையினைச் சொல்லினும் முன்பு சொன்ன துறையேயாம் எ-று.

(வ - று.)
ஒள்வா ளமரு ளுயிரோம்பான் றானீயக்
கொள்வார் நடுவட் கொடையோம்பான் - வெள்வாள்
கழியாமே மன்னர் கதங்காற்றும் வேலான்
ஒழியாமே யோம்பு முலகு.

(இ - ள்.) ஒள்ளிய வாட்பூசலிடத்து உயிரைப் பாதுகாவான், தான் கொடுப்ப ஏற்பாரிடை வழங்குதலைப் பரிகரியான், தெளிந்தவாளை உறையினின்றும் வாங்காமே அரசர்கோபத்தைக் கால்விக்கும் வேலினையுடையான் தப்பாமே காக்கும், உலகத்தை எ - று.

(7)