நெடுந்தேர்த் தானை நீறுபட நடக்கும் கடுந்தேர் மன்னவன் கண்படை மலிந்தன்று. (இ - ள்.) உயரிய தேரான் மிக்க பகைவர்சேனை பொடிபடச் சொல்லும் கடுந்தேரினையுடைய வேந்தனது துயிலை மிகுத்தது எ-று. (வ - று.) 1மேலா ரிறையமருண் மின்னார் சினஞ்சொரியும் வேலான் விறன்முனை வென் றடக்கிக் - கோலாற் கொடிய வுலகிற் குறுகாமை யெங்கோன் கடியத் துயிலேற்ற கண். (இ - ள்.) வீரர் தங்கிய போரிடத்து ஒளிநிறைந்து செற்றம்பொழியா நிற்கும் வேலாலே வலியபூசலைச் சயித்து ஒடுக்கிச் செங்கோனீதியாற் கொடியவை பூமியிடத்துக் கிட்டாமை எம்முடைய அரசன் நீக்குதலான் உறக்கத்தை மேவின, விழிகள் எ - று. (8)
1. தொல். புறத். சூ. 29, இளம். மேற் |