அடுதிறன் மன்னரை யருளிய வெழுகெனத் தொடுகழன் மன்னனைத் துயிலெடுப் பின்று. (இ - ள்.) கொல்லும் வலியினையுடைய வேந்தர்க்கு அருள எழுந் திருப்பாயாகவெனக் கட்டுங்கழல்வேந்தனைத் துயினீக்கியது எ-று. (வ - று.) ! அளந்த திறையா ரகலிடத்து மன்னர் வளந்தரும் வேலோய் வணங்கக் - களந்தயங்கப் பூமலர்மேற் புள்ளொலிக்கும் பொய்கைசூழ் தாமைரைத் தூமலர்க்க12ணேற்க துயில். (இ - ள்.) இட்ட திறையினையுடையார் அகன்ற பூமியிடத்து வேந்த, வென்றிதரும் வேலினையுடையாய், நின்னைப் பணிய, இடம் விளங்கப் பொலிந்த மலர்மீதே பறவைகள் ஆரவாரிக்கும் பொய்கையிற் சூழ்ந்த தாமரையில் தூயமலரையொத்த கண்கள் துயிலாவாக எ - று. எழுக துயிலென்றுமாம். (9)
1. புறநா. 383; 1; பெருங். 4; 7: 91-2. 2. ணேர்க |