திருக்கிளரு மகன்கோயில் அரக்கிணைவன் வளமுரைத்தன்று. (இ - ள்.) செல்வம்பெருகும் பரந்தமாளிகையிடத்து அழகிய கிணை கொட்டுமவனது நன்மையைச் சொல்லியது எ-று. (வ - று.) 1வெள்ளி முளைத்த விடியல் வயல்2யாமை அள்ளகட்ட டன்ன வரிக்கிணை - வள்ளியோன் முன்கடை தட்டிப் பகடுவாழ் கென்னாமுன் என்கடை நீங்கிற் றிடர். (இ - ள்.) வெள்ளியெழுந்த வைகறையாமத்துச் செறுவின் யாமையினது செறிந்த வயிற்றினையொத்த அழகியகிணையை உபகாரியுடைய வாசற் கடைமுன்னே கொட்டி யானைவாழ்வதாகவென்று சொல்லுவதன் முன்னே என்னிடத்து நின்றும் ஒழிந்தது, துயர் எ-று. இஃது அரசர் மேற்று: (18)
1. பொருந.72. 2. பு-வெ.186. (பி-ம்)அடிக். |