210. மணமங்கலம்
இகலடுதோ ளெறிவேன் மன்னன்
மகளிரொடு மணந்த மங்கலங் கூறின்று.

(இ - ள்.) பகையைக் கொல்லும் புயத்தினையும் எறியும் வேலினையுமுடைய வேந்தன் அரிவையரோடு புணர்ந்த நன்மையைச் சொல்லியது எ-று.

(வ - று.)
அணக்கருந் தானையா னல்லியந்தார் தோய்ந்தோள்
மணக்கோல மங்கலம்யாம் பாட - வணக்கருஞ்சீர்
ஆரெயின் மன்னன் மடமக ளம்பணைத்தோட்
கூரெயிற்றுச் செவ்வாய்க் கொடி.

(இ - ள்.) பகைவரான் வருத்துதற்குரிய சேனையினையுடையான்றன் அல்லிமாலையை மணந்தாள், வதுவையணிப்பொலிவை யாங்கள் புகழ; தாழப்பண்ணுதற்கரிய மதிப்பினையும் நிறைந்த அரணினையுமுடைய வேந்தன்றன் பேதையாகிய அழகிய மூங்கில்போன்ற தோளினையும் கூரிய பல்லினையும் சிவந்த வாயினையுமுடைய காமவல்லியனையாள் எ-று.

(22)