211. பொலிவுமங்கலம்
வேல்வேந்த னுண்மகிழப்
பாலன் பிறப்பப் பலர்புகழ்ந் தன்று.

(இ - ள்.) வேலினையுடைய மன்னன் மனமுவப்பப் புதல்வன் பிறத்தலாற் பலரும் கொண்டாடியது எ-று.

(வ - று.)
கருங்கழல் வெண்குடைக் காவலற்குச் செவ்வாய்ப்
பெருங்கட் புதல்வன் பிறப்பப் - பெரும்பெயர்
விண்ணார் மகிழ்ந்தார் வியலிடந்தா ரேத்தினார்
எண்ணா ரவிந்தா ரிகல்.

(இ - ள்.) வலியவீரக்கழலினையும் தவளசத்திரத்தையுமுடைய வேந்தற்குச் சிவந்த வாயினையும் பெரிய கண்ணினையுமுடைய மைந்தன் பிறத்தலாற் பெரிய நாமத்தினையுடைய தேவர்கள் மகிழ்ந்தார்; அகன்ற பூமியிலுள்ளார் வாழ்த்தினார்; பகைவர் மாறுபாடொழிந்தார் எ-று.

(23)