சேணோங்கிய வரையதரிற் பாணனை யாற்றுப்படுத்தன்று (இ - ள்.) மிகவுமுயர்ந்த மலைவழியிடத்துப் பாணனை வழியிலே செலுத்தியது எ-று. (வ - று.) இன்றொடை நல்லிசை யாழ்ப்பாண வெம்மைப்போற் கன்றுடை வேழத்த கான்கடந்து- சென்றடையிற் காமரு சாயலாள் கேள்வன் கயமலராத் தாமரை சென்னி தரும். (இ - ள்.) இனிய கோவையினையுடைய நல்லிசையான் மலிந்த யாழினைவல்ல பாணனே,எங்களையொப்பக் களபத்தினையுடைய யானை இயங்கப்பட்ட காட்டைக்கழிந்து சென்று பொருந்தின, அழகுமருவின மென்மையினையுடையாள் கணவன் வாவியிற் பூவாத 1பொற்றாமரைப் பூவைத் தலையிலே சூட்டும் எ-று. சென்றடையின், தருமென்க. (28)
1. பு-வெ.31. |