மறந்திரி வில்லா மன்பெருஞ் சூழ்ச்சி அறந்தெரி கோலாற் கறிய வுரைத்தன்று. (இ - ள்.) மாற்சரியம் கெடுதலில்லாத நின்று நிலைத்த பெரிய எண்ணத்தைத் தருமத்தை ஆராயும் செங்கோலினையுடையாற்கு உணர மொழிந்தது எ-று. (வ - று.) 1அந்தணர் சான்றோ ரருந்தவத்தார் தம்முன்னோர் தந்தைதா யென்றிவர்க்குத் தார்வேந்தே - முந்தை வழிநின்று பின்னை வயங்குநீர் வேலி மொழிநின்று கேட்டன் முறை. (இ - ள்.) வேதியர் அமைந்தோர் அரியதவத்தினையுடையோர் தம்முடைய தமையன்மார் தகப்பன் மாதா இப்படியொத்த இவர்க்கு மாலை மன்னனே, முன்னோர்செய்த நெறியேநின்று பின்பு கடலை எல்லையாகவுடைய ஞாலத்து வார்த்தையை நின்றுகேட்குமது வழக்கு எ-று. (33)
1. தொல் புறத்.சூ.39,இளம்.மேற்.;குறள்432,பரிமேல்.வி. |