சூழநேமியான் சோவெறிந்த வீழாச்சீர் விறன்மிகுத்தன்று. (இ - ள்.) வளைந்த திகிரியையுடையவன் சோவென்னும் அரணத்தினை அழித்த கெடாத தன்மையினையுடைய வெற்றியைச் சிறப்பித்தது எ-று. (வ - று.) 1மாயவன் மாய மதுவான் மணிநிரையுள் ஆயனா வெண்ண லவனருளான் -காயக் கழலவிழக் கண்கனலக் கைவளையார் சோரச் சுழலழலுள் வைகின்று சோ. (இ - ள்.) கரியவன் வஞ்சம் அவ்வகையால்; மணியையுடைய ஆனிரையிடத்துக் கோவலனாக எண்ணாதேகொள்; அவன் அளியானாகிக் கோபிக்க அசுரர் கட்டின வீரக்கழல் நெகிழ விழியழலக் கையில் தொடியுடைய மகளிர்கள் மயங்கச் சுற்று நெருப்புள்ளே தங்கினது, 2சோவென்னும் அரண் எ-று. (40)
1. தொல். புறத். சூ. 22, இளம். மேற். 2. பு.வெ. 101; நான்மணி. கடவுள்; சிலப்.17: "மூவுலகும்"; கூர்ம. சுவேதவராக. 5. |