239. ஊரின்கட் டோன்றிய காமப்பகுதி
நீங்காக் காதன் மைந்தரு மகளிரும்
பாங்குறக் கூடும் பதியுரைத் தன்று.

(இ - ள்.) ஒழியாத அன்பினையுடைய ஆடவரும் மகளிரும் அழகு பொருந்தக் கூடும் பதியைச் சொல்லியது எ-று.

(வ - று.)
1ஊடிய வூட லகல வுளநெகிழ்ந்து
வாடிய மென்றோள் வளையொலிப்பக் -கூடியபின்
யாமநீ டாகென்ன யாழ்மொழியார் கைதொழூஉம்
ஏம்நீர்க் கச்சியெம் மூர்.

(இ - ள்.) வழக்காடிய, வழக்காட்டுப்போக மன நெகிழ்ந்து வாட்ட முற்ற மெல்லியதோளில் தொடி ஆர்ப்பப் புணர்ந்த பின்பு இரவுப் பொழுது நீட்டிப்பதாகவெனச் சொல்லி யாழிசைபோலும் சொல்லினை யுடையார் கைகூப்பும் காவலுடைத்தாய்ப் புனலாற்சிறந்த காஞ்சி, எங்கள் பதி எ-று.

ஆக வென்பது ஆகெனக் குறைந்து நின்றது.

(51)

1. பு.வெ. 317.