அடுமுர ணகற்று மாளுகு ஞாட்பிற் கடுமுரண் வயவன் கழல்புனைந் தன்று. (இ - ள்.) கொல்லும் மாறுபாட்டைப் பெருக்கும் வீரர்படும் பூசலிற் கடிய முரணையுடைய வீரன் கழலைப் புனைந்தது எ-று. (வ - று.) 1வாளமரின் முன்விலக்கி வான்படர்வார் யார்கொலோ கேளலார் நீக்கிய கிண்கிணிக்காற் - காளை கலங்கழல் வாயிற் கடுத்தீற்றி யற்றால் பொலங்கழல் கான்மேற் புனைவு . (இ - ள்.) வாட்பூசலில் எதிர்நின்று விலக்கிச் சுவர்க்கத்திடத்துச் செல்வார் யாவர்கொல்லோ ? உறவல்லாதாரைப் போக்கிய சதங்கை அமைந்த தாளினையுடைய இளமைப்பருவத்து வேந்தன் , மிக்க நெருப்பின் வாயிலே நஞ்சைத் தீற்றிய தன்மைத்து , பொன்னாற்செய்த வீரக் கழலைச் சேவடியின்மீது அணியுமது எ-று. (7)
1. தொல். புறத். சூ. 5. இளம். மேற். |