252. கன்முறை பழிச்சல்
நிழலவி ரெழின்மணிப்பூட்
கழல்வெய்யோன் கல்வாழ்த்தின்று.

(இ - ள்.) நிழல்விடும் அழகிய மணிப்பூணினையும் வீரக்கழலையுமுடைய போர்விருப்பத்தோனுடைய கல்லினை ஏத்தியது எ-று.

(வ - று.)
1அடும்புகழ் பாடி யழுதழுது நோனா
திடும்பையுள் 2வைகி யிருந்த - கடும்பொடு
கைவண் குருசில் 3கற் கைதொழூஉச் செல்பாண
தெய்வமாய் நின்றான் றிசைக்கு .

(இ - ள்.) பகைவரைக்கொல்லும் கீர்த்தியைச் சொல்லிக் கலுழ்ந்து கலுழ்ந்து பொறாதே துன்பத்துள்ளே தங்கியிருந்த சுற்றத்தாரோடு கை வளப்பத்தினையுடைய உபகாரிதன் கல்லினைக்கைதொழுது போவாயாக , பாணனே, கடவுளாய் நின்றான் திக்கு எட்டிற்கும் எ-று.

(13)

1. தொல். புறத். சூ. 5, இளம். மேற் .
2. வைகிற்றிருந்த
3. புறநா. 306 : 4; பட்டினப். 78-9 , குறிப்புரை .