புனையிழை யிழந்தபிற் புலம்பொடு வைகி மனையகத் துறையு மைந்தனிலை யுரைத்தன்று. (இ - ள்.) அணிந்த ஆபரணத்தினையுடையாளை இழந்தபின் தனிமையுடனே தங்கி இல்லிடத்து அவதரிக்கும் ஆண்மகன் முறைமையைச் சொல்லியது எ-று. (வ - று.) பைந்தொடி மேலுலக மெய்தப் படருழந்த மைந்தன் குருசின் மழைவள்ளல்-எந்தை 1தவுதாரத் தாழ்ந்த தனிநிலைமை கேளாச் செவிடா யொழிகென் செவி. (இ - ள்.) பச்சென்ற வளையினையுடையாள் சுவர்க்கத்தைப்பொருந்த வருத்தமுற்ற ஆண்மகன்,தலைவன், மழைபோலக் கொடுக்கும் உபகாரி,என்னுடைய சாமி மனையாளை இழந்தழுந்தின தனியான நிலைமையைக் கேளாத செவிடாய்ப் போக, என் செவி எ-று. (3)
1. தபுதாரத் |