இன்கதிர் முறுவற்பாலக னென்னும் தன்கட னிறுத்ததாய் தபுநிலை யுரைத்தன்று. (இ - ள்.) இனிய ஒளிநகையினையுடைய பிள்ளையென்னும் தான் கொடுக்கக் கடவதனைக் கொடுத்த மாதர் இறந்த முறைமையைச் சொல்லியது எ-று. (வ - று.) 1இடம்படு ஞாலத் தியல்போ கொடிதே தடம்பெருங்கட் பாலகனென்னும்-கடன்கழித்து முள்ளெயிற்றுப் பேதையாள் புக்காள் முரணவியா வள்ளெயிற்றுக் கூற்றத்தின் வாய். (இ - ள்.) அகன்ற பூமியினது தன்மையோ கொடியதொன்றே! மிகப்பெரிய கண்ணினையுடைய பிள்ளையென்று சொல்லும் கொடுக்கக் கடவதனைக் கொடுத்து முட்போலக் கூரிய பல்லினையுடையாள் தலைப்பட்டாள்,மாறுபாடு கெடாத வளப்பம் மிக்க எயிற்றினையுடைய கூற்றுவன் வாயிலே எ-று. (5)
1. தொல். புறத். சூ. 19, இளம், மேற். |