269. முதுமொழிக் காஞ்சி
பலர்புகழ் புலவர் பன்னினர் தெரியும்
உலகியல் பொருண்முடி புணரக் கூறின்று.

(இ - ள்.) எல்லோரும் கொண்டாடும் அறிவுடையோர் குற்றம் நீக்கி ஆராயும் உலகத்தியலுள் முடிந்த பொருளாகிய அறம்பொருளின்பத்தை அறியச் சொல்லியது எ-று.

(வ - று.)
ஆற்றி னுணரி னருளறமா மாற்றார்க்குப்
போற்றார் வழங்கிற் பொருள்பொருளாம்-மாற்றிப்
புகலா தொழுகும் புரிவளையார் மென்றோள்
அகலா தளித்தொழுக லன்பு.

(இ - ள்.) நெறியான் அறியின், அருள் தன்மாகும்; வறியவர்க்குப் பரிகரியாராய்க் கொடுப்பிற் பொருள் பொருளாம்; மாறி விரும்பாது ஒரு நெறிப்பட நடக்கும் முறுக்குவளையினையுடையோர்தம் மெல்லிய தோளை நீங்காதே அளித்து நடக்குமது காதலாம் எ-று.

(1)