மலையோங்கிய மாநிலத்து நிலையாமை நெறியுரைத்தன்று. (இ - ள்.) வரையுயர்ந்த பெரிய குவலயத்து நிலையில்லா நெறியைச் சொல்லியது எ-று. (வ - று.) ஆயா தறிவயர்ந் தல்லாந் தகலிடத்து மாயா நிதிய மனைச்செறீஇ-ஈயா 1திறுகப் பொதியன்மி னின்றொடு நாளைக் குறுக வருமரோ கூற்று. (இ - ள்.) ஆராயாதே உணர்ச்சி மறந்து அலம்வந்து பூமியிடத்துக் கெடாத பெரும்பொருளை இல்லிலே சேர்த்திப் பிறர்க்கு வழங்காதே சிக்கெனக் கட்டிவையாதொழிமின்; இன்றாதல் நாளையாதல் நும்மை அணுகவரும் கூற்றம் எ-று. அதனால், ஈயாது இறுகப் பொதியன்மினென்க. ஒடுவும் அரோவும் அசைகள். (2)
1. நாலடி.4,36. |