1நுழைபுலம் படர்ந்த நோயறு காட்சி விழைபுலங் கடந்தோர் வீடுரைத் தன்று. (இ - ள்.) நுண்ணிதான அறிவு சென்ற குற்றமற்ற தரிசனத்தையுடையராய் இந்திரியசயம் பண்ணினார் விரும்பும் மேலுலகத்தைச் சொல்லியது எ-று. (வ - று.) பொய்யில் புலவர் புரிந்துறையு மேலுலகம் ஐயமொன் றின்றி யறிந்துரைப்பின் - வெய்ய பகலின் றிரவின்று பற்றின்று துற்றின் றிகலின் றிளிவரவு மின்று. (இ - ள்.) மெய்ஞ்ஞானிகள் விரும்பி யுறையும் விண்ணுலகத்தை ஐயப்பாடு ஒன்றுமின்றியே உணர்ந்துசொல்லின், வெவ்விதான பகற்பொழுதுமில்லை; இரவுப் பொழுதுமில்லை; பாசமுமில்லை; உணவுமில்லை; மாறுபாடுமில்லை; தாழ்வுமில்லை எ-று. (4)
1. குறள், 407. |