கழுமிய காதற் கணவனைப் பழிச்சி இழுமென் சீர்த்தி யின்மலி புரைத்தன்று (இ - ள்.) பொருந்திய காதற்கணவனை வாழ்த்திப் பலரும் இசைக்கும் அனுகரணத்தினையுடைய கீர்த்தியாற் சிறந்த இல்லின்மிகுதியைச் சொல்லியது எ-று. (வ - று.) கல்லெனீர் வேலிக் கணவன் கழல்வாழ்த்தி 1ஒல்லும் வகையால் விருந்தோம்பிச்-செல்லுந்தம் இற்செல்வ மன்றி யிரந்தவர்க் கீகல்லாப் புற்செல்வம் பூவா புகழ். (இ - ள்.) அனுகரண சத்தத்தான் மிக்க கடலை வேலியாகவுடைய ஞாலத்திடத்துக் கொழுநன் பாதத்தையேத்திச் செயற்படும் வகையால் விருந்தினரைப் பாதுகாத்து நடக்கும் தம்முடைய இல்லிடத்துச் செல்வமல்லது வேண்டினோர்க்குக் கொடுக்கமாட்டாப் புல்லிய சம்பத்து, இசை பூக்கமாட்டா எ-று. (5)
1. குறள், 33. |