வருவாரை யெதிர்விலக்கி ஒருதானாகி யாளெ றிந்தன்று. (இ - ள்.) பொருவாரை எதிரே விலக்கித் தானொருவனுமேயாகி வீரரை வெட்டியது எ-று. (வ - று.) பிள்ளை கடுப்பப் பிணம்பிறங்க வாளெறிந்து கொள்ளைகொ ளாயந் தலைக்கொண்டார் - எள்ளிப் பொருதழிந்து மீளவும் பூங்கழலான் மீளான் ஒருதனியே நின்றா னுளன். (இ - ள்.) விளைவறியாத பிள்ளையையொப்பப் பிணம் பெருக்க வீரரை வெட்டி வெட்சியார் கொள்ளைகொண்ட ஆனிரையைக் கிட்டினார் இகழ்ந்து பூசற்செய்து கெட்டு மீண்டுபோகவும் மீளானாகித் தனியேநின்றான் ஒரு பூங்கழலானுளன் எ - று. (7) |