அரிபா யுண்க ணாயிழைப் புணர்ந்தோன் பரிவக லுள்ளமொடு பால்வாழ்த் தின்று. (இ - ள்.) செவ்வரி கருவரி பரந்த மையுண்ட விழியினையும் தெரிந்த ஆபரணத்தினையும் உடையானை மணந்தவன் வருத்தம் நீங்கின மனத்துடனே விதியை ஏத்தியது எ-று. (வ - று.) திங்கள் விளங்குந் திகழ்ந்திலங்கு பேரொளி 1அங்கண் விசும்பி னகத்துறைக-செங்கட் குயிலனைய தேமொழிக் கூரெயிற்றுச் செவ்வாய்ப் பயில்வளையை நல்கிய பால். (இ - ள்.) மதியிலங்கும்,மிக்கு விளங்கும் பெரியசோதியினையுடைய அழகிய இடத்தினையுடைய சுவர்க்கத்திலே உறைவதாக;சிவந்த கண்ணினையுடைய குயிலின் இசைபோன்ற இனிய சொல்லினையும் கூரிய எயிற்றினையும் செய்ய வாயினையும் செறிந்த தொடியினையுமுடையாளை எனக்குத் தந்த விதி எ-று. (7)
1. மதுரைக். 384; நாலடி.151,373. |