திருவளர் நன்னக ரடைந்த கொழுநன் பெருவள மேத்தினு மத்துறை யாகும். (இ - ள்.) செல்வம் பெருகும் அழகிய மாளிகையிலே சேர்ந்தகணவன்றன் பெரிய செல்வத்தை வாழ்த்தினும் முற்பட்ட துறையேயாம் எ-று. (வ - று.) ஊழிதோ றூழி தொழப்பட் டுலைவின்றி ஆழிசூழ் வையத் தகமலிய-வாழி கருவரை மார்பினெங் காதல னல்க வருவருந் தோம்பும் வளம். (இ - ள்.) நெடுங்காலந்தோறும் நெடுங்காலந்தோறும் வணங்கப்பட்டுக் கேடின்றிக் கடல் சூழ்ந்த பாரகம் பெருக வாழ்வதாக!வலிய மலைபோன்ற அகலத்தினையுடைய எம் கணவன் அருள யான் வருகிற விருந்தைப் போற்றுஞ் செல்வம் எ-று. வளம் வாழி. பெயரெடுத்துக் கூறியவழிப் புறப்புறமாம்; நெடுநெல்வாடை போலப் பெயரோடு அடாது கூறியவழிப் பெருந்திணையாம்; இவை பிறர் மதமென்றலுமொன்று. (10) |