சுரும்பிவர் பூம்பொழிற் சுடர்வேற் காளை கருந்தடங் கண்ணியைக் கண்டுநயந் தன்று. (இ - ள்.) வண்டு பரக்கும் பூவினையுடைய சோலையிடத்து ஒளிவேற்காளை கறுத்த பெருத்த கண்ணினையுடையாளைக் கண்டு விரும்பியது எ-று. (வ - று.) 1கருந்தடங்கண் வண்டாகச் செவ்வாய் தளிரா அரும்பிவர் மென்முலை தொத்தாப் -பெரும்பணைத்தோட் பெண்டகைப் பொலிந்த பூங்கொடி கண்டேங் காண்டலுங் களித்தவெங் கண்ணே. (இ - ள்.) கருமையும் பெருமையுமுடைய விழி சுரும்பாகச் சிவந்த வாய் தளிராக அரும்புபோன்ற மெல்லிய முலை தொத்தாகப் பெரிய மூங்கில் போன்ற தோளாலும் பெண்மைத்தன்மையாலும் அழகுபெற்றதோர் மலர்வல்லியனையாளை நோக்கினோம்; நோக்கினேமாக, மகிழ்ந்தன எமது விழிகள் எ-று. (1)
1. தொல். களவு. சூ. 2. ந. மேற். நாற்கவி. சூ. 199, உரை, மேற். |