285. காட்சி
சுரும்பிவர் பூம்பொழிற் சுடர்வேற் காளை
கருந்தடங் கண்ணியைக் கண்டுநயந் தன்று.

(இ - ள்.) வண்டு பரக்கும் பூவினையுடைய சோலையிடத்து ஒளிவேற்காளை கறுத்த பெருத்த கண்ணினையுடையாளைக் கண்டு விரும்பியது எ-று.

(வ - று.)
1கருந்தடங்கண் வண்டாகச் செவ்வாய் தளிரா
அரும்பிவர் மென்முலை தொத்தாப் -பெரும்பணைத்தோட்
பெண்டகைப் பொலிந்த பூங்கொடி
கண்டேங் காண்டலுங் களித்தவெங் கண்ணே.

(இ - ள்.) கருமையும் பெருமையுமுடைய விழி சுரும்பாகச் சிவந்த வாய் தளிராக அரும்புபோன்ற மெல்லிய முலை தொத்தாகப் பெரிய மூங்கில் போன்ற தோளாலும் பெண்மைத்தன்மையாலும் அழகுபெற்றதோர் மலர்வல்லியனையாளை நோக்கினோம்; நோக்கினேமாக, மகிழ்ந்தன எமது விழிகள் எ-று.

(1)

1. தொல். களவு. சூ. 2. ந. மேற். நாற்கவி. சூ. 199, உரை, மேற்.