இணரார் கோதையென் னெஞ்சத் திருத்தும் உணரா ளென்னையென வுட்கொண் டன்று. (இ - ள்.) கொத்து நிறைந்த மாலையினையுடையாள் என் மனத்திலே இருந்தும் என்னை அறியாளென உள்ளத்திலே தலைவன் கைக்கொண்டது எ-று. (வ - று.) கவ்வை பெருகக் கரந்தென் மனத்திருந்தும் செவ்வாய்ப் பெருந்தோட் டிருநுதலாள் - அவ்வாயில் அஞ்சொன் மாரிபெய் தவியாள் நெஞ்சம் பொத்தி நிறைசுடு நெருப்பே. (இ - ள்.) ஆரவாரம் மிக மறைந்து என்நெஞ்சிலேயிருந்தும், சிவந்த வாயினையும் பெரியதோளினையும் அழகிய நுதலினையும் உடையவள் அழகிய வாயிடத்து அழகிய வார்த்தையாகிய மழையைச் சொரிந்து ஆற்றாள்; என்மனத்திலேகலந்து என்னுடைய நிறையுடைமையைச் சுடா நின்றது காமத் தீ எ-று. காமதிதீயை அஞ்சொல்மாரி பெய்து அவியாளென்க. உட்கோளாவது உறலாமென்பதனை உட்கொள்கை. (4) |