289. பயந்தோர்ப் பழிச்சல்
இவட்பயத் தெடுத்தோர் வாழியர் நெடிதென
அவட்பயத் தோரை யானாது புகழ்ந்தன்று.

(இ - ள்.) இவளைப் பெற்றெடுத்தோர் பெரிதும் வாழ்வாராக வெனச் சொல்லி அவளைப் பெற்றோரை அமையாது புகழ்ந்தது எ-று.

(வ - று.)
கல்லருவி யாடிக் 1கருங்களிறு காரதிரும்
மல்ல்லஞ் சாரன் மயிலன்ன - சில்வளைப்
பலவொலி கூந்தலைப் பயந்தோர்
நிலவரை மலிய நீடுவா ழியரே.

(இ - ள்.) மலையருவி யாடி வலிய யானை மேகம்போல முழிங்கும் வளப்பத்தினையுடைய அழகிய மலைப்பக்கத்து மயிற்பேடையையொத்த சில தொடியினையும் பலபகுதியாய்த் தழைந்த மயிரினையுமுடையாளைப் பெற்றோர், பூமியெல்லையிலே மிக நெடுங்காலம் வாழ்வாராக எ-று.

(5)

1. பு. வெ. 37 : 4