294. காண்டல்
தேம்பாய் தெரியல் விடலையைத் திருநுதற்
காம்பேர் தோளி கண்டுசோர்ந் தன்று.

(இ - ள்.) மதுப்பொழியும் மாலையினையுடைய தலைவனை அழகிய நுதலினையும் மூங்கில் போன்ற தோளினையும் உடையாள் நோக்கி மெலிந்தது எ-று.

(வ - று.)
கடைநின்று காம நலியக் கலங்கி
இடைநின்ற வூரலர் தூற்றப் - புடைநின்ற
1எற்கண் டிலனந் நெடுந்தகை
தற்கண் டனென்யான் கண்ட வாறே.

(இ - ள்.) என்னிடத்திலே ஆசையானது நின்று நெருக்க மயங்கி நடுவுநின்ற ஊர் அலரெடுப்பப் பக்கத்திலே நின்ற என்னைக் கண்டிலன், அந்தப் பெரிய மேம்பாட்டினையுடையவன்; தன்னைக் கண்டேன் யான்; கண்டபடியே ! எ-று.

(1)

1. பு.வெ.307 : 3-4.