296. உட்கோள்
வண்டமர் குஞ்சி மைந்தனை நயந்த
ஒண்டொடி யரிவை யுட்கொண் டன்று.

(இ - ள்.) சுரும்பு மேவும் மயிரினையுடைய தலைவனை விரும்பிய ஒள்ளிய வளையினையுடைய தலைவி உட்கொண்டது எ-று.

(வ - று.)
உள்ள முருக வொளிவளையுங் கைநில்லா
கள்ளவிழ் தாரானுங் கைக்கணையான் - எள்ளிச்
சிறுபுன் மாலை தலைவரின்
உறுதுய ரவலத் துயலோ வரிதே.

(இ - ள்.) நெஞ்சு வருந்த ஒள்ளிய தொடிகளும் கரத்தைப் பொருந்தாவாயின தேனொழுகப்பட்ட மாலையினையுடையானும் என்னுடைய கரங்களுக்கு எய்தானாயினான்; இகழ்ந்து சிறியதாய்ப் புற்கென்ற மாலைக் காலம் கைகூடின், மிகும் வருத்தத்தைச் செய்யும் இழுக்கினின்றும் பிழைத்தல் சால அருமையுடைத்து எ-று.

(3)