வெருவரும் வாளமர் விளிந்தோற் கண்டு கருவி மாக்கள் கையற வுரைத்தன்று. (இ - ள்.) அஞ்சத்தகும் வாட்பூசலிலே பட்டோனைப் பார்த்து யாழ்ப்பாணர் அவன் பட்டபடியைச் சொல்லியது எ-று. (வ - று.) 1நாப்புலவர் சொன்மாலை நண்ணார் படையுழக்கித் 2தாப்புலி யொப்பத் தலைக்கொண்டான் - பூப்புனையும் நற்குலத்துட் டோன்றிய நல்லிசையாழ்த் தொல்புலவீர் கற்கொலோ சோர்ந்திலவெங் கண். (இ - ள்.) செந்நாப் புலவருடைய 3கீர்த்திமாலை, பகைவர் சேனையைத் துகைத்து வலிய புலியையொப்பப் பட்டான்; பொற்றாமரைப் பூவைச் சூடும் நல்ல குலத்திலே பிறந்த அழகிய இசையினையுடைய யாழாற் சிறந்த பழைய அறிவினையுடையீர், கல்லோ அறியோம் ,விழுந்தில எம்முடைய கண்கள் எ - று. (10)
1. "மறையவர் சொன்மாலை" (பு-வெ.189.) 2. "தாப்புலி யனைய வெற்றிச் சராசந்தன்" (கூர்ம. கண்ணன்பூமி.70) 3. கீர்த்திமாரையைத் தலைக்கொண்டு பகைவர் |