மைவரை நாடன் மார்பகம் பொருந்திக் கைவிட லறியாக் காதலிற் களித்தன்று (இ - ள்.) மேகம்பொருந்தின மலைநாடனுடைய மார்பிடத்தே மேவி நீங்குதலறியாத அன்பினால் மகிழ்ந்தது எ-று. (வ - று.) காதல் பெருகிக் களிசெய்ய வக்களியாற் 1கோதையுந் தாரு மிடைகுழைய-மாதர் கலந்தாள் கலந்து கடைக்கண்ணாற் கங்குல் புல்ந்தாள் புலரியம் போது. (இ - ள்.) அன்புமிக்குக் களிப்புச்செய்ய அம்மகிழ்ச்சியால் மாலையும் கோதையும் நடுவே வாடக் காதலினையுடையாள் கூடினாள்; கூடிக் கடைக்கண்ணாலே நோக்கி இரவுப்பொழுதை முனிந்தாள், விடியற்காலத்து எ-று. கங்குல் கழிந்ததென்று புலந்தாள். (12)
1. புறநா. 73 : 13-4, குறிப்புரை. |