322. பாடகச் சீறடி பணிந்தபின் இரங்கல்
கோடுயர் வெற்பன் கூப்பிய கையொடு
1பாடகச் சீறடி பணிந்தபி னிரங்கின்று.

(இ - ள்.) குவடு நீண்ட மலையினையுடையவன் குவித்த கையுடனே பாடகம் அணிந்த சிற்றடியிலே வணங்கியபின்பு நெஞ்சு நெகிழ்ந்தது எ-று.

(வ - று.)
அணிவரு பூஞ்சிலம் பார்க்கு மடிமேல்
மணிவரை மார்பன் மயங்கிப் - பணியவும்
வற்கென்ற நெஞ்சம் வணங்காய் சிறுவரை
நிற்கென்றி வாழியர் நீ.

(இ - ள்.) அழகுமிகும் பொலிந்த சிலம்பு ஆரவாரிக்கும் அடிமேலே அழகிய வரைபோன்ற அகலத்தையுடையவன் கலங்கி வணங்கவும் வலிமையுற்ற மனமே , வணங்காயாய் சிறியகாலை ஊடல்தீராதே நிற்பனென்று சொல்லாநின்றாய்; வாழ்வாயாக நீ எ-று.

வாழியரென்பது நகை.

(17)

1. பு.வெ. 303.