326. மடலூர்தல்
ஒன்றல்ல பலபாடி
மன்றிடை மடலூர்ந்தன்று.

(இ - ள்.) ஒன்றன்றியே பலவற்றையும் சொல்லி மன்றின்நடுவே மடன்மாவைச் செலுத்தியது எ-று.

(வ - று.)
இன்றிப் படரோ டியானுழப்ப வைங்கணையான்
வென்றிப் பதாகை யெடுத்தானாம் - மன்றில்
தனிமடமா னோக்கி தகைநலம்பா ராட்டிக்
குனிமடன்மாப் பண்ணிமேல் கொண்டு.

(இ - ள்.) இற்றைநாள்,இந்த நினைவுடனே யான் பழக ஐந்தம்பினையுடைய காமன் வெற்றிக்கொடியை உயர்த்தானாம்;அம்பலத்திலே ஒப்பில்லாத மடப்பத்தினையுடைய மாமன்ன பார்வையாள்தன் மிக்க அழகைக் கொண்டாடி வளைந்த பனைமடலாலாகிய குதிரையைப் பண்ணி அதன்மேல் ஏறி எ-று.

ஏறி இன்று இப்படரோடு யானுழப்ப ஐங்கணையான் வென்றிப் பதாகை எடுத்தானாகும்.

(2)