33. பிள்ளைப் பெயர்ச்சி
போர்தாங்கிப் புள்விலங்கியோனைத்
தார்வேந்தன் றலையளித்தன்று.

(இ - ள்.) புள்ளைவிலக்கிப் பூசலைத்தாங்கினவனை மாலையினையுடைய மன்னன் தண்ணளி செய்தது எ-று.

(வ - று.)
பிணங்கமருட் பிள்ளை பெயர்ப்பப் பெயரா
தணங்கஞர்செய் தாளெறித னோக்கி - வணங்காச்
சிலையளித்த தோளான் சினவிடலைக் கன்றே
தலையளித்தான் றண்ணடையுந் தந்து.

(இ - ள்.) மாறுபடும் பூசலிடத்துக் காரியென்னும் புள் விலக்கவும் விலங்கானாய்ப் பகைவரை வருத்துந் துன்பத்தைச் செய்து வீரரைவெட்டுதலைப் பார்த்து வளையாத மலையினையொத்த தோளான் செற்றத்தினையுடைய வீரனுக்கு அற்றைநாளே வரிசைகொடுத்தான்,மருதநிலம் பலவுங் கொடுத்து எ - று.

(12)