333. பெண்பாற் கிளவி
வெள்வளை நெகிழவு மெம்முள் ளாத
கள்வனைக் காணாதிவ் வூரெனக் கிளந்தன்று.

(இ - ள்.) சங்கவளை சோரவும் எம்மை நினையாது வெள்வளையினைக் கொண்ட கள்வனைக் காணாது இப்பதியென்று சொல்லியது எ-று.

(வ - று.)
வானத் தியலு மதியகத்து வைகலும்
கானத் தியலு முயல்காணும் - தானத்தின்
ஒள்வளை யோடவு முள்ளான் மறைந்துறையும்
கள்வனைக் காணாதிவ் வூர்.

(இ - ள்.) விண்ணில் நடக்கு நிறைமதியிடத்து நாடோறும் காட்டிலே திரியும் முயலைக் காணாநிற்கும்; கையிடத்து ஒள்ளிய வளைகழலவும் உணரானாகி ஒளித்து வாழுங் கள்வனைக் காணாது , இந்தப்பகுதி எ-று.

இவையிரண்டும் கைகடந்த காமத்த; இக்கூற்று இவர்க்கே உரிய; அல்லன யாவர்க்கும் உரிய.

(9)