தேங்கமழ் கோதை செம்ம லளிநினைந் தாங்கந் நிலைமை யாயறி யாமை வேங்கையஞ் சிலம்பிற்கு வெறியா டின்று. (இ - ள்.) மணநாறு மாலையுடையாள் , தலைவனது அருளைக் கருதி அவ்விடத்து அந்நிலைமையைத் தாயறியாதபடி வேங்கைமரத்தாற் பொலிந்த மலையையுடைய முருகற்கு வெறிக்கூத்து ஆடியது எ-று. (வ - று.) 1வெய்ய நெடிதுயிரா வெற்ப னளிநினையா ஐய நனிநீங்க வாடினாள் - மையல் அயன்மனைப் பெண்டிரொ டன்னைசொ லஞ்சி வியன்மனையு ளாடும் வெறி . (இ - ள்.) வெவ்விதாகத் தீர்க்க 2சுவாதம் விட்டுத் தலைவனது அருளைக் கருதித் தலைவன் வருவனோ வாரானோ வென்னும் ஐயப்பாடு மிகவும் நீங்க ஆடினாள் , மயக்கத்தினையுடைய அயன்மனை மகளிருடனே அன்னை சொல்லையும் அஞ்சி , அகன்ற மனையிடத்தே ஆடும் வெறிக்கூத்தை எ-று. ஆடினாள் யார் ? தலைவி. (10)
1. தொல். புறத். சூ. 5, இளம். மேற். 2. சுவாதம் : வி.பா. நிவாத கவச. 15. |