336. பரத்தை கூறல்
தேங்கமழ் சிலம்பன் றாரெமக் கெளிதெனப்
பாங்கவர் கேட்பப் பரத்தை மொழிந்தன்று.

(இ - ள்.) மணங்கமழும் மாலையையுடைய தலைவன் மாலை எமக்குப் பெறுதற்கு எளிதென்று சொல்லிப் பாங்காயினார் கேட்பப் பரத்தை மொழிந்தது எ-று.

(வ - று.)
பலவுரைத்துக் கூத்தாடிப் பல்வய லூரன்
நிலவுரைக்கும் பூணவர் சேரிச் - செலவுரைத்து
வெங்கட் களியால் விறலி விழாக்கொள்ளல்
எங்கட் கவன்றா ரெளிது .

(இ - ள்.) பலபொய்யும் சொல்லி நடித்துப் பல செய்யினையுடைய ஊரன் நிலவைக் காட்டும் முத்தணியினையுடைய பரத்தையர் சேரியிடத்துப் போக்கைச் சொல்லி வெவ்விய மதுவையுண்ட மகிழ்ச்சியாற் பாணிச்சி விழாவினைக் கொண்டாடாதேகொள்; எமக்கு அவனுடைய மாலை எளிது எ-று.

ஆதலால் , விழாக்கொள்ளல்.

(12)