339. பரத்தை வாயில் பாங்கி கண்டுரைத்தல்
உம்மி லரிவை யுரைமொழி யொழிய
எம்மில் வலவனுந் தேரும் வருமெனப்
பரத்தை வாயிற்குப் பாங்கி பகர்ந்தன்று.

(இ - ள்.) உங்கள் வீட்டிடத்து மடவாள் சொன்ன வாரத்தை நீங்க , எங்கள் அகத்திடத்துப் பாகனும் தேரும் வருமெனச் சொல்லி இற்பரத்தை தோழிக்குச் சேரிப்பரத்தை தோழி சொல்லியது எ-று.

(வ - று.)
மாணலங் கொள்ளு மகிழ்நன் றணக்குமேற்
பேணலம் பெண்மை யொழிகென்பார் - காணக்
கலவ மயிலன்ன காரிகையார் சேரி
வலவ னெடுந்தேர் வரும் .

(இ - ள்.) மாட்சிமைப்பட்ட எமது அழகினைக் கைக்கொள்ளும் தலைவன் எம்மை விட்டு நீங்குவானாயின் , விரும்பேம்; பெண்மைத் தன்மை எம்மிடத்து நீங்குக என்று சொல்லும் இற்பரத்தையர் காணத் தோகை மயிலினையொத்த பரத்தையர்தம் சேரிக்கண் பாகனையுடைய உயரிய தேர் வாராநிற்கும் எ-று.

பேணலம் பெண்மையொழிகென்பார் காண வரும்.

(15)