(வ - று.) கண்டான் மலைந்தான் கதிர்வானங் காட்டியே கொண்டான் பதாகை மறமல்லன் - வண்டார்க்கும் மாலை துயலு மருவிய மாமலை போலுந் திரடோள் புடைத்து . (இ - ள்.) எதிரி மல்லனைக் கண்டான் , மாறுபட்டான் , ஒளியான் மிக்க ஆகாயத்திடத்தே அவனை எழ வீசிக் குறித்த தாயத்தைக் கொண்டான் , வெற்றிக்கொடியினையுடைய மறமல்லன்; வண்டொலிக்கும் மாலை அசையும் அருவியினையுடைய பெரிய மலையையொக்கும் திரண்ட தோளினைத் தட்டி எ-று. புடைத்துக் கொண்டான் . தட்டுகை - உடக்கரிக்கை. (3) |