(வ - று.) கஞ்சுகம் வாய்த்த கவளந்தன் - கைக்கொண்ட குஞ்சரம் வென்ற கொலைவேழம் - துஞ்சா துழலையும் பாய்ந்திறுத் தோடாது தான்றன் நிழலையுந் தான்சுளிக்கு நின்று. (இ - ள்.) அட்டிமதுரமிட்டுத் திரட்டின கவளத்தைத் தன்கையிலே கொண்ட யானையை வென்ற கொலைத்தொழிலையுடை வேழம் , உறங்காதே கணையத்தையும் பாய்ந்து முறித்து ஓடாதே தான் தன்னுடைய நிழலையும் வெகுண்டு நின்று துகைக்கும் எ-று. உம்மை ; சிறப்பு. (8) |