(வ - று.) புரிவொடு நாவினாற் பூவை புணர்த்துப் பெரிய வரியவை பேசும் - தெரிவளை வெள்ளெயிற்றுச் செவ்வாய் வரியுண்க ணாள்வளர்த்த கிள்ளை கிளந்தவைகீண் டிட்டு . (இ - ள்.) பிரியத்தோடு நாவினாலே பூவையானது வகுத்துப் பெரியவான சொல்லுதற்கரிய வார்த்தைகளைச் சொல்லும்; தெரிந்தவளையினையும் விளர்த்த எயிற்றினையும் சிவந்த வாயினையும் செவ்வரி கருவரியாற் சிறந்த மையுண்ட கண்ணினையு முடையாள் தான் வளர்த்தகிளி சொன்ன வார்த்தைகளைக் கிழித்துக் கீழ்ப்படுத்தி எ-று. கீண்டிட்டுப் பேசும். (12) |