(வ - று.) ஒலிமணித் திண்டே ருடையாரை வெல்லும் கலிமணித் திண்டேராற் காளை- கலிமாப் பலவுடன் பூட்டிப் படர்சிறந் தைந்து செலவோடு மண்டிலஞ் சென்று. (இ - ள்.) ஒலிக்கும் மணியையுடைய திண்ணிய தேரினையுடைய பகைவரை வெல்லும் , ஆரவாரிக்கும் மணிகளையுடைய திண்ணிய தேராலே காளையானவன்; மனவெழுச்சியையுடைய குதிரை பலவும் ஒக்கப் பூட்டிச் செல்லுதல் மிக்க பஞ்சதாரையுடனே பதினெட்டுச்சுற்று வரவும் அமர்ந்து எ-று. சென்று வெல்லும். (14) |